கடந்த கல்வி ஆண்டில் நமது பள்ளிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ரவிசங்கர் தியான பீடத்தின் சார்பில் நமது குழந்தைகளுக்கு சிறப்பு யோகாசனப் பயிற்சி அளித்தனர். மேலும் கரூர்மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.ராமமூர்த்தி அவர்கள் பள்ளிக்கு வருகைதந்து குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்கினார். மேலும் தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்தும் தேவை குறித்தும் பேசினார். அவருடன் வழக்குரைஞர்களும், பிற நீதிபதிகளும் வந்திருந்து பள்ளியை சிறப்பித்தனர்.
அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
- க.வெ.காமராசன்
தாளாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக