"வாருங்கள் வடம் பிடிப்போம்.வரலாற்றில் இடம் பிடிப்போம்."

செவ்வாய், 8 மே, 2012

மனவளம் குன்றிய குழந்தைகளின் கல்விப் பயிற்சி









நமது பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தாயுள்ளம் கொண்ட ஆசிரியைகள் சிறப்புக் கல்விகற்பிக்கும் காட்சிகள். சாதாரன குழந்தைகளை பராமரிப்பதைவிட மனவளம் குன்றிய இந்த குழந்தைகளை பேணி வளர்க்க மிகுந்த பாச உணர்வும், சகி்ப்புத்தன்மையும் அவசியம். நல்ல குழந்தைகளையே தவிக்க விட்டுவிடும் பெற்றோர்களுக்கிடையே மிக குறைந்த சம்பளத்தில் மிக உயர்ந்த ஈக உணர்வுடன் செயலாற்றும் எங்கள் பள்ளி ஆசிரியைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறந்தநாள்விழா!





நமது பள்ளியின் வளர்ச்சியிலும், தமிழ்மீது தீராத பற்றும் கொண்ட நமது நண்பர் தனது பிறந்தநாள் விழாவை நமது பள்ளி மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி நம்மை நெஞ்சம் நெகிழச் செய்த அவருடைய பிறந்தநாளில் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.

புரவலர் வருகை! பள்ளிக்கு பெருமை!!














கடந்த கல்வி ஆண்டில் நமது பள்ளிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ரவிசங்கர் தியான பீடத்தின் சார்பில் நமது குழந்தைகளுக்கு சிறப்பு யோகாசனப் பயிற்சி அளித்தனர். மேலும் கரூர்மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.ராமமூர்த்தி அவர்கள் பள்ளிக்கு வருகைதந்து குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்கினார். மேலும் தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்தும் தேவை குறித்தும் பேசினார். அவருடன் வழக்குரைஞர்களும், பிற நீதிபதிகளும் வந்திருந்து பள்ளியை சிறப்பித்தனர்.
அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
- க.வெ.காமராசன்
தாளாளர்.